பிஞ்சி மலரே! கோவை சிறுமி கொலை குறித்து நடிகர் விவேக் பதிவு!
நடிகர் விவேக் கோவை சிறுமி கொலை குறித்து தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை: நடிகர் விவேக் கோவை சிறுமி கொலை குறித்து தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
நகைச்சுவை நடிகர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பொது நலன் கருதி மரம் வளர்த்தல், இன்றைய இளைஞர்கள் செல்ஃபோனில் மூழ்காமல் இயற்கையைப் பாதுகாப்பது நல்லது என்பதைச் சொல்வதோடு மட்டுமின்றி களத்தில் இறங்கி பணியாற்றியும் வருகிறார்.
மேலும் சமூகத்தில் அவ்வப்போது அரங்கேறும் அநீதிகளுக்காகவும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இம்முறை கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனது மன வேதனையைத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அண்மையில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பிஞ்சு மலரே! உனக்கு பாதுகாப்பு இல்லாத, வெறி பிடித்த மிருகங்கள் உலவும் சமூகத்தில் நாங்களும் இன்னும் வாழ்வதே பெரும் அவலம் தாயே! ( இனியேனும் பெற்றோர் குழந்தைகளை உங்கள் அண்மையிலும் பாதுகாப்பிலும் வையுங்கள்) pic.twitter.com/4KYyNhOwnF
— Vivekh actor (@Actor_Vivek) March 29, 2019
இந்நிலையில் நடிகர் விவேக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பிஞ்சு மலரே! உனக்கு பாதுகாப்பு இல்லாத, வெறி பிடித்த மிருகங்கள் உலவும் சமூகத்தில் நாங்களும் இன்னும் வாழ்வதே பெரும் அவலம் தாயே! (இனியேனும் பெற்றோர் குழந்தைகளை உங்கள் அண்மையிலும், பாதுகாப்பிலும் வையுங்கள்)’ என்று மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பரபரப்பான தேர்தல் களம்: வாழ்வில் உங்களுக்கு சக்தி கிடைக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்: சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ்!