பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தனர்- பிரபல தொகுப்பாளினி!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தனர்- பிரபல தொகுப்பாளினி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்காக தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்தியில் 13 -வது சீசனும், தமிழில் 3 வது சீசனும் நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து 3 சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார்.

swetha

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்பிற்காக தன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாகவும் பிரபல டிவி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி கூறியுள்ளார்.இப்படி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இச்சைக்கு இணங்கிதான் அதில் பங்கேற்க வேண்டும் என்றால் அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என ஒதுங்கிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.