பிக் பாஸ் சீசன் 3 செய்தியை பார்த்து கடுப்பான அப்சரா ரெட்டி!?
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் தான் பங்கேற்பதாக வெளியாகியுள்ள செய்திக்குத் திருநங்கை அப்சரா ரெட்டி விளக்கமளித்துள்ளார்.
சென்னை: பிக் பாஸ் மூன்றாவது சீசனில் தான் பங்கேற்பதாக வெளியாகியுள்ள செய்திக்குத் திருநங்கை அப்சரா ரெட்டி விளக்கமளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிக் பாஸ் மூன்றாவது சீசன் வரும் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். தற்போது அதற்கான புரொமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 குறித்து தினம் தோறும் ஏதேனும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் பிக் பாஸ் 3 போட்டியில் மகிளா காங்கிரஸ் செயலாளர் அப்சரா ரெட்டி பங்கேற்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த செய்தி குறித்து அப்ரசா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், ‘நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. முதல் சீசனில் பங்கேற்க அழைப்பு வந்ததையே நிராகரித்து விட்டேன். 3வது சீசனிலும் பங்கேற்கவில்லை. டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க நான் விரும்புவது இல்லை. ஊடகங்களில் இவ்வாறான பொய்யான செய்திகளைப் பரப்புவதை தவிர்த்து விடுங்கள்’ என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
The rumours that I’m participating in Bigg Boss Tamil are all false. I had been offered Season 1 which I declined. Not going to be doing Season 3. And not interested in participating in reality TV. Some credible news outlets are reporting this. Please avoid reporting false news.
— Apsara R (@talktoapsara) June 1, 2019
முன்னதாக சாந்தினி, ரமேஷ் திலக்,கஸ்தூரி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியும் கலந்து கொள்ளப் போவதாக வந்த செய்தியை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.