பா. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த 5 படங்கள் அறிவிப்பு! இயக்குநர்கள் இவர்கள் தான்!

 

பா. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த 5 படங்கள் அறிவிப்பு! இயக்குநர்கள்  இவர்கள் தான்!

இந்த படங்களை நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் ஆகியவை தயாரிக்கவுள்ளது.

இயக்குநர்  பா.ரஞ்சித்  அட்டகத்தி, கபாலி, காலா என சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் முன்னணி  இயக்குநர்கள்  வரிசையில் இணைந்து  விட்டார். அதற்கு காரணம்  அவரின் படைப்புகள் பேசும்படியாக இருந்தது.  இதை தொடர்ந்து நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், குண்டு போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

ttn

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரஞ்சித் அடுத்ததாக 5 புதிய படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மீண்டும் மாரி  செல்வராஜுடன் கைகோர்க்கும் ரஞ்சித்,  லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க் ஜேக்கப் மற்றும் சுரேஷ் மாரி ஆகியோருடனும் பணியாற்றவுள்ளார். இந்த படங்களை நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் ஆகியவை தயாரிக்கவுள்ளது.

இந்த படங்களில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்  குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.