பண்டிகை நாட்களை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்: பின்னணி என்ன? 

 

பண்டிகை நாட்களை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்: பின்னணி என்ன? 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

பொதுவாக முன்னணி ஹீரோக்களின் படங்களை பண்டிகை நாள்களில் வெளியிடுவதை வழக்கமாக வெய்துள்ளனர். விஜயின் மெர்சல், சர்கார் தீபாவளி அன்று வெளியானது. அதே போன்று வரும் தீபாவளிக்கு பிகிலுடன் களமிறங்குகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியானது. அடுத்த பொங்கல் பண்டிகைக்கு அவரின் தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

siva

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் படங்களும் பண்டிகை நாள்களையே குறிவைத்து களமிறங்குகிறது. ரெமோ விஜயதசமி அன்றும், வேலைக்காரன் கிறிஸ்துமஸ் அன்றும், ரஜினி முருகன் பொங்கல் அன்றும் சீமராஜா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் வெளியானது.

siva

இந்த நிலையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகும் படங்களையும் பண்டிகையை முன்னிட்டே வெளியிட திட்டமித்துள்ளார். தற்போது பாண்டிராஜ்  நடித்து வரும் படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார். அதைப்போல பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ஹீரோ படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடவுள்ளனர்.மேலும் பண்டிகை நாளில் படத்தை வெளியிட்டால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும்,அதை அவர் செண்டிமெண்டாக பார்ப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.