நித்தியானந்தா இறைவனின் தூதர், அவரே கடவுள்- மீரா மிதுன் வெளியிட்ட அதிரடி கருத்து
பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவரும் மீரா தற்போது நித்தியானந்தா குறித்த ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ‘Living Enlightment’ புத்தகத்தை வைத்துக்கொண்டு, “இந்த ஆச்சர்யமூட்டம் புத்தகத்தை நான் படித்துவருகிறேன், இது போன்ற புத்தகங்களை எல்லோருமே படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பற்றிய அறிவை இந்த புத்தகம் தருகிறது. நித்தியானந்த இறைவனின் தூதர், அவரே கடவுள்” என்று கூறுகிறார்.