‘தளபதி தங்க மோதிரம் வழங்கியது சிறப்பு’ : பாராட்டுடன் சர்ப்ரைஸை உடைத்த ‘பிகில்’ டீம்!
நடிகர் விஜய் பிகில் படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400 பேருக்கு தங்கமோதிரம் வழங்கியது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் பிகில் படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400 பேருக்கு தங்கமோதிரம் வழங்கியது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில்
நயன்தாரா,நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியானது. ஃபர்ஸ்ட் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியது.
நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.இதையடுத்து நடிகர் விஜய் பிகில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்குத் தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
அதில் படத்தின் பெயரான பிகில் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை சுமார் 400 வழங்கியுள்ளார். இதே போல் கால்பந்து வீரர்களாக நடித்த நடிகர்களுக்கு தன் கையொப்பமிட்ட கால்பந்தையும் விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.
#Bigil has a team of 400 members working in the film everyday Our Thalapathy made it extra special by valuing each an every individual’s contribution today. This token of affection coming from him made everyone’s day #PositiveVibes #HeartOfGold #OurThalapathyIsTheBest ??
— Archana Kalpathi (@archanakalpathi) August 13, 2019
இந்நிலையில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் , பிகில் படத்தில் பணியாற்றி வருபவர்களுக்குத் தளபதி தங்க மோதிரம் வழங்கியது அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
We are finally at that stage where we can plan and announce updates Dubbing has started post production is in full swing and shooting is 95% complete Apologies for the lack of updates but we are trying to exceed you expectations and that needs time ? #BigilTeam
— Archana Kalpathi (@archanakalpathi) August 13, 2019
மேலும் பிகில் படத்தின் அப்டேட்டை கூறும் நேரம் வந்து வைத்தது. படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. தாமதமாகக் கூறுவதற்கு மன்னித்து விடுங்கள். உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இன்னும் சில கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.