சூர்யாவின் அ ‘கரம்‘ பிறந்தது எப்படி!

 

சூர்யாவின் அ ‘கரம்‘ பிறந்தது எப்படி!

ஏழை மாணவர்களின் கல்வியை அரவணைத்து செல்லும் கரம், கல்வியில் ஒளியேற்றும் கரம் என்பது ‘அகரம்’

சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை அளிப்பதை நோக்கமாக வைத்தே அகரம் தொடங்கப்பட்டது. 

ஏழை மாணவர்களின் கல்வியை அரவணைத்து செல்லும் கரம், கல்வியில் ஒளியேற்றும் கரம் என்பது ‘அகரம்’

agaram

சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை அளிப்பதை நோக்கமாக வைத்தே அகரம் தொடங்கப்பட்டது. 

suriya

அகரம் அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  நடிப்பு மட்டுமின்றி ஏழை குழைந்தைகளின் படிப்பு செலவை ஏற்று படிப்புக்கு வழிகாட்டும் உன்னத பணியை சூர்யா செய்துவருகிறார்.  அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் நடிகர் சூர்யா. 

agaram

அகரம் பவுண்டேஷன் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தேதி நடிகர் சூர்யாவால் நிறுவப்பட்டது. 2010 இல் இந்த அமைப்பு வசதியற்ற மற்றும் திறன்கொண்ட +2 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளிப்பதற்காக தொடங்கப்பட்டதே அகரம். தகுதியான மாணவர்களுக்கும் உதவி செய்ய விரும்புவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக திகழ்ந்து நற்பணிகள் செய்வதே அகரத்தின் முக்கிய நோக்கம். அதே சமயம் பயன் அடையும் மாணவரின் வளர்ச்சியையும் அகரம் கண்காணிக்கிறது. திறமையை வைத்துக்கொண்டு சமூகத்தில் தலைநிமிரத் துடிக்கும் ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து, அவர்களுக்கு கல்வி என்னும் எதிர்காலத்தை வழங்கி நம்பிக்கையை பதிய விடுகிறது. நான் நடிகராக இருப்பதைவிட அகரம் மூலம் சமூகத்திற்கு ஏதோ ஒரு நல்ல விஷயம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை பார்க்கும்போதுதான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என நடிகர் சூர்யாவே தெரிவித்துள்ளார். 

suriya

கடந்த 25  ஆண்டுகளுக்கும் மேலாக ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் சிவக்குமார் நிதி உதவி செய்து வருகிறார். சூர்யா, நடிக்கத் துவங்கிய பிறகு அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பை உருவாக்கி, சிவக்குமார் செய்து வந்த கல்வி உதவியை விரிவாக்கினார். இதில் சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார். அகரம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி பெற்று ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் கல்வியை பெற்றுள்ளனர்.