சூப்பர்ஸ்டாரின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா காலமானார்: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
நடிகர் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா தனது 89வது வயதில் சென்னையில் இன்று காலமானார்.
சென்னை: நடிகர் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேன் முத்தப்பா சென்னையில் இன்று காலமானார்.
தமிழின் மூத்த தயாரிப்பாளரான மறைந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் மேக்-அப் மேனாக வாழ்க்கையை துவங்கியவர் முத்தப்பா. சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தில் அவருக்கு மேக்கப் போட்ட இவர், கமலஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட பல படங்களில் ஒப்பனையாளராக பணியாற்றியுள்ளார்.
இப்படி சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி ஹீரோக்கள் தொடங்கி தற்போதுள்ள திரிஷா வரை பலருக்கும் மேக்கப் இவர் மேக்கப் போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான மேக்-அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கிய இவர், ரஜினியுடன் சில படங்களிலும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவரின் வாழ்க்கை விவரிக்கும் விதமாக ‘ஒப்பனைக்காரன்’ என்றொரு புத்தகமே வெளிவந்துள்ளது. இள.அழகிரி எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சீனியர் மேக்கப் மேன் முத்தப்பா மரணம்..
சென்னையில் அவர் வீட்டுக்கு சென்று ரஜினிகாந்த் அஞ்சலி. #Rajinikanth @RIAZtheboss pic.twitter.com/XMp8yb3eQS— meenakshisundaram (@meenadmr) December 18, 2018
இந்நிலையில், சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முத்தப்பா, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு, நடிகர் ரஜினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.