சிம்புவை முத்தமிடனும்; விஷாலை கொல்லனும்: வில்லி வரலக்ஷ்மி அதிரடி
காதல், கல்யாணம் பற்றிய கேள்விகளுக்கு அதிரடி பதிலளித்து அனைவரையும் வாய் அடைக்கச் செய்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
சென்னை: காதல், கல்யாணம் பற்றிய கேள்விகளுக்கு அதிரடி பதிலளித்து அனைவரையும் வாய் அடைக்கச் செய்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
‘சர்கார்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வில்லத்தனத்தில் மிரட்டிய நடிகை வரலக்ஷ்மிக்கு 2018 ஆண்டுக்கான சிறந்த வில்லி நடிகை என்ற விருது வழங்கப்பட்டது. தனியார் ஊடக நிறுவனத்தின் விருது விழாவிற்கு தனது அம்மாவின் சீமந்த புடவையை கட்டிக் கொண்டு வந்த வரலக்ஷ்மி தனது விருதினை அவரது தாய்க்கு சமர்ப்பித்தார்.
Best actress in a negative role..thank you so much @behindwoods #BehindwoodsGoldMedals2018 feels amazing to win an award in the year ending.. wearing my mother’s #seemantham Saree when she was pregnant with me..This one is for u mom.. love u thank u all for ur love n support..? pic.twitter.com/DrD2NSR2PE
— varu sarathkumar (@varusarath) December 16, 2018
அப்போது வரலக்ஷ்மியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஒருவருக்கு கிஸ் கொடுப்பேன், ஒருவரை கொலை செய்வேன் மற்றும் ஒருவரை திருமணம் செய்துக் கொள்வேன் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என கேட்கப்பட்டது. இதற்கு யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி பதிலை வழங்கியுள்ளார்.
சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரைத் திருமணம் செய்துக் கொள்வேன் என அதிரடியாக கூறியுள்ளார்.