சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்: கதறி அழுத நடிகர் கார்த்தி; வைரல் வீடியோ!
நடிகர் கார்த்தி சமீபத்தில் நடித்திருந்த கைதி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று தந்தது. இதனால் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது.
நடிகர் கார்த்தி சமீபத்தில் நடித்திருந்த கைதி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று தந்தது. இதனால் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் நித்யா. இவர் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.
நிர்வாகி நித்யா பலியான செய்தியறிந்து நடிகர் கார்த்தி அவருக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த இணையத்தில் வைரலாகி வருகிறது.
#கார்த்தி மக்கள் நல மன்றத்தின் நிர்வாகி #நித்யா அவர்கள் உயிரிழந்த சோக செய்தியறிந்து எங்கள் அண்ணன் #கார்த்தி அவர்கள் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்?
— Karthi Fans 24×7ᵗʰᵃᵐᵇᶤ (@KarthiFans24x7) November 30, 2019
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி இரவு நேரங்களில் காரில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.