சர்கார் 50வது நாள் கொண்டாட்டம்: தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம் 50வது நாளை எட்டியுள்ளதை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம் 50வது நாளை எட்டியுள்ளதை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், வசூலை வாரிக் குவித்தது. உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் ரிலீசான ‘சர்கார்’ திரைப்படம் சுமார் ரூ.252 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்திய ‘சர்கார்’ அதிலும் பல சாதனைகளை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக் ‘சர்கார்’ என்றும், அதிகம் பேசப்பட்ட நபர்களில் தளபதி விஜய்யும் ஒருவர் எனவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.
#Sarkar50thDay Today! pic.twitter.com/h4VNjF45gC
— Ramesh Bala (@rameshlaus) December 25, 2018
இப்படம் ரிலீசாகி இம்மாத இறுதியுடன் 50 நாட்கள் நிறைவடைவதை தளபதி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இப்படம் மீண்டும் சில திரையரங்குகளில் தளபதி ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தற்போது ட்விட்டரில் #Sarkar50thDay என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தளபதி விஜய் நடித்த படங்களிலேயே ரூ.250 கோடி வசூலித்த இரண்டாவது திரைப்படம் ‘சர்கார்’ ஆகும். முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் ரூ.250 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.