சஞ்சீவ் ஹாப்பி தான்… ஆனா ஆல்யா மானஸா படுஅப்செட்டாம்!
இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர். அதையொட்டி இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் நிச்சயதார்த்தம் கூடச் செய்து வைத்தனர். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த ஜோடி கடந்த மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது. ஆல்யாவின் வீட்டில் சஞ்சீவ் இஸ்லாமியர் என்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இந்த ஜோடி அவசர கல்யாணம் செய்து கொண்டதாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்கள்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சஞ்சீவ் ஹாப்பி அண்ணாச்சியாக இருந்தாலும் ஆல்யா படுஅப்செட்டாக உள்ளாராம். காரணம், ஆல்யா குடும்பத்தில் அவரது அப்பா, தங்கை என அனைவரும் அவரிடம் கோபம் மறந்து பேசிய போதிலும், அவரது அம்மா மட்டும் இன்னும் கோபம் குறையாமல் உள்ளாராம். ஆல்யா மானஸா கர்ப்பமானது தெரிந்தும் கூட அவர் கோபம் தணியவில்லையாம். இதனால் ஆல்யா வருத்தத்தில் இருக்கிறாராம்.