‘சகிக்க முடியல’ : லாஸ்லியா – கவினை விளாசும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான கவிஞர் சினேகன் லாஸ்லியா கவினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான கவிஞர் சினேகன் லாஸ்லியா கவினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் போட்டி இருக்கிறதோ இல்லையோ, காதல் மட்டும் அளவுக்கு அதிகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
கவின் – சாக்ஷி காதலுக்கு எண்டுகார்ட் போட்ட நிலையில் புதிதாக லாஸ்லியா – கவின் காதல் ஆரம்பித்தது. இவர்களின் காதலுக்குச் சிலர் ஆதரவு கூறி வந்தாலும், சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சகிக்க முடியவில்லை என்று கூறுவேன்#AskThalaivanSnehan https://t.co/bOQn6eDplU
— கவிஞர் சினேகன் (@Kavignar_Snehan) September 5, 2019
இந்நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் சினேகனிடம் டிவிட்டரில், லாஸ்லியாவிடம் நீங்க சொல்ல விரும்புவது என்ன? என்று கேட்டதற்கு, சகிக்க முடியவில்லை என்று கூறுவேன் என பதிலளித்துள்ளார்.
போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சிக்கும் நரி தந்திரத்தை அவர் விட்டுவிட வேண்டும்#AskThalaivanSnehan#BiggBossTamil #BiggBossTamil3 https://t.co/hqEhqE8Qqz
— கவிஞர் சினேகன் (@Kavignar_Snehan) September 5, 2019
அதேபோல் கவினிடம் என்ன சொல்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘போட்டிப் போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சிக்கும் நரி தந்திரத்தை அவர் விட்டுவிட வேண்டும்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.