கோடி கோடியா கொட்டினாலும் நடிக்க மாட்டேன்! – பிரியா ஆனந்த் உறுதி
ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் வேறு மாநில பெண்களை அழைத்துவந்து, அவர்களின் நிறத்தை கம்மியாக காட்ட மேக் அப் போட்டு ஷூட் செய்கிறார்கள். பிறகு இந்த க்ரீம் போட்டதால் வெள்ளையாகிவிட்டார் என்று கூறுகிறார்கள்.
வாமனன், அரிமா நம்பி, இரும்பு குதிரை, எதிர் நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கோடிக் கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் முகத்தை வெள்ளையாக்கும் அழகு சாதன க்ரீம் விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன். ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் வேறு மாநில பெண்களை அழைத்துவந்து, அவர்களின் நிறத்தை கம்மியாக காட்ட மேக் அப் போட்டு ஷூட் செய்கிறார்கள்.
This is why we love you, admire u @PriyaAnand
This attitude ??
Keep this fire always in ur heart ?
God bless pic.twitter.com/mQI92Kyj1C— Priya Anand Fc™ ✰ (@Priyaanand___) February 3, 2020
பிறகு இந்த க்ரீம் போட்டதால் வெள்ளையாகிவிட்டார் என்று கூறுகிறார்கள். இப்படி செய்வது துளி கூட நியாயமில்லாதது. இதனால்தான் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க முடியாது என்று கூறுகிறேன். மேலும், தென்னிந்தியப் பெண்களின் டஸ்கி கலர் மற்றும் அவர்கள் கண்களில் இருக்கும் ஸ்பார்க் வேறு எங்கும் காண முடியாது” என்றார்.