கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் செவிலியர் பணிக்குத் திரும்பும் பிக் பாஸ் ஜுலி!

 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் செவிலியர் பணிக்குத் திரும்பும் பிக் பாஸ் ஜுலி!

‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக அறியப்பட்டவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக் கொண்டு, மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன.

julie

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று சீசனும் முடிந்துவிட்டது ஆனால், ஜூலியை கலாய்ப்பது மட்டும் ஓயவில்லை. இவர் தற்போது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். 

 

 

செவிலியர் படித்த ஜூலியை வம்பிழுத்த நெட்டிசன்கள், செவிலியராக ஏற்கனவே பணியாற்றியுள்ளதால் நீங்கள் ஏன் கொரோனா நோயாளிகளுக்கு உதவக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்விளைவாக ஜூலி, கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க விண்ணப்பித்தார். அவர் சிகிச்சை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருப்பதால் விரைவில் செவிலியர் பணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.