குடியுரிமையை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.. நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு!

 

குடியுரிமையை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.. நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே நடிகர் சித்தார்த், இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து பல்வேறு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttnn

இதற்கு, மம்தா பேனர்ஜி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் மாணவர்கள் தாக்குதலைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். 

ttn

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே நடிகர் சித்தார்த், இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு நேரில் சென்று நடிகர் சித்தார்த் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அங்குப் பேசிய சித்தார்த், குடியுரிமைக்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று தெரிவித்தார்.