கார்த்தி நடிக்கும் ‘கைதி’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
சென்னை: ‘தேவ்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படத்திற்கு ‘கைதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ‘தேவ்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படத்திற்கு ‘கைதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘தேவ்’ படம் கார்த்திக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக்கு தேவ் படம் தந்த தோல்வியால் மிகவும் கவலை அடைந்தார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி கொண்டனர்.
இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரித்து, ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. படத்திற்கு ‘கைதி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் நேற்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.
First look of #கைதி.
A full fledged action thriller. Happy to be working with a lot of good actors and technicians. #Kaithi #KaithiFirstLook @itsNarain @Dir_Lokesh @sathyaDP @SamCSmusic pic.twitter.com/zEVJmdQ5hl
— Actor Karthi (@Karthi_Offl) March 8, 2019
ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் படமாக ‘கைதி’ படம் இருக்கும் என்று டுவிட்டரில் பதிவிட்ட நடிகர் கார்த்தி, நல்ல நடிகர்கள் மற்றும் டெக்னிசீயன்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தி பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பாக்யராஜ் கண்ணன் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.