கணவரைச் சமாதானம் செய்யப் பிரியங்கா சோப்ரா என்ன செய்தார் தெரியுமா?
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வரும் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வரும் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு எப்போதும் ஒன்றாக சுற்றித்திரிந்த இவர்கள் தற்போது மீண்டும் தங்களது துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதனால் சமீபகாலமாக இவர்கள் இருவரும் சேர்ந்து செலவிடும் நேரம் குறைந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் 2019 வீடியோ மியூசிக் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கு மனைவி இல்லாமல் தனியாக நிக் ஜோனஸ் சென்றுள்ளார். அப்போது அவருடைய சகோதரர்கள் இருவரும் தங்கள் மனைவிகளுடன் முத்தம் பரிமாறிக்கொண்டிருக்க, நிக் ஜோனஸ் மட்டும் நடுவில் தனியாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது.
இதை கண்ட பிரியங்கா சோப்ரா, அவரும், நிக்வும் ஏற்கனவே தழுவிக் கொண்டிருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை எடுத்து போட்டோஷாப் செய்து அதில் பொருத்தி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் என்றும் உங்களுடன் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டு கணவரைச் சமாதானம் செய்துள்ளார்.