ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது ஏன்?  குஷ்பு விளக்கம்

 

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது ஏன்?  குஷ்பு விளக்கம்

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதால் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் குஷ்பு மீது எழுந்த நிலையில் ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது ஏன் என நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார். 

ஆயுஷ்மான் குர்ரானா, நடிகர் ஜிதேந்திர குமாருடன் இணைந்து  ‘சுப் மங்கல் ஜியாடா சவ்தன்’ படத்தில் நடிக்கிறார். ஆயுஷ்மான் மற்றும் ஜிதேந்திரா நடிக்கும் இந்த படம் ஓரின சேர்க்கை தம்பதியினரின் உறவை மையமாகக் கொண்ட படம். இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தன் படத்தை நடிகை குஷ்பு ட்விட்டரில் பாராட்டியிருந்தார். இதற்கு குஷ்பு மீது எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

குஷ்பு

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு“ஓரினச் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றமே ஆதரவளித்துள்ள நிலையில், ஓரின சேர்க்கையை ஆதரித்து வெளியான திரைப்படத்தை பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.