என் குழந்தைகள் இப்படி வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” கரோனா குறித்து  வருத்தம் தெரிவித்த சன்னி லியோன்

 

என் குழந்தைகள் இப்படி வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” கரோனா குறித்து  வருத்தம் தெரிவித்த சன்னி லியோன்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஹாலிவுட் பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் பலரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். கோவிட் -19 பரவுதலுக்கு மத்தியில்,அனைவரும் வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே தங்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஹாலிவுட் பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் பலரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். கோவிட் -19 பரவுதலுக்கு மத்தியில்,அனைவரும் வெளியில் செல்வதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே தங்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

sunny-leone-78

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஐந்து பேரும் மாஸ்க் அணிந்திருப்பதைக் காணலாம்.

அந்த பதிவில் “இது ஒரு புதிய சகாப்தம்! என் குழந்தைகள் இப்போது இப்படி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது எனக்கு வருத்தமளிக்கிறது, ஆனால் இது இப்போது அவசியம். குழந்தைகளுக்கு முகமூடி அணிய பயிற்சி கொடுப்பதின் முதல் நாள் இன்று நாதலினா குழுவின் குடும்ப முயற்சி!” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக சமூக வலைத்தளங்களில் பலரும் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.