எனக்கு கொரோனா நெகட்டிவ் என்ற செய்தி தவறானது- அமிதாப் பச்சன்

 

எனக்கு கொரோனா நெகட்டிவ் என்ற செய்தி தவறானது- அமிதாப் பச்சன்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களை தொடர்ந்து, நடிகையும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் தம்பதி மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை செய்தும் ரிசல்ட் நெகட்டிவ் என வந்ததாகவும் செய்தி வெளியானது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், “எனக்கு கொரோனா பரிசோதனை நெகடிவ் என வந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது மற்றும் ஒரு பொய்யான செய்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.