எதுக்கு டா இவளோ எமோஷன்: ஃபேக் அக்கவுண்ட் மீது பொங்கி எழுந்த பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர் தனது பெயரில் போலியாக இயங்கி வரும் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மீது பொங்கி எழுந்துள்ளார்.
சென்னை: பிரியா பவானி ஷங்கர் தனது பெயரில் போலியாக இயங்கி வரும் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மீது பொங்கி எழுந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னத்திரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கரின் பெயரை கெடுக்கும் விதமாக போலி அக்கவுண்ட்கள் ட்விட்டரில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதை கண்ட பிரியா பவானி ஷங்கர் அவர்களை கண்டிக்கும் விதமாக ட்வீட் ஒன்று பதிவிட்டிருந்தார். அதில் ‘உங்களுடைய ஆர்வமும், பொறுப்பும் எனக்கு புரிகிறது. ஆனாலும், மணிக்கு ஒருமுறை ஏதேனும் பதிவிட்டு என்னை சங்கடப்படுத்தாதீர்கள்’ என்று கூறியிருந்தார்.
Apdiae @narendramodi kum oru account create pannita prime minister madriae tweet potralamey ? fake account ku edhuku da ivlo emotion! #annoying own your opinion instead of driving it over others https://t.co/eWTB5yDneB
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 24, 2019
அவர் கூறியதை சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், மீண்டும் அந்த அக்கௌன்ட்டிலிருந்து பிரதமர் மோடியை வாழ்த்துவது போன்று பதிவு வெளியாகியுள்ளது. இதை பார்த்து பார்த்து பொங்கி எழுந்த பிரியா பவனி ஷங்கர், ‘அப்படியே நரேந்திர மோடிக்கும் ஒரு அக்கௌன்ட் துவங்கி, இதே மாதிரி ட்வீட் போடலாமே.. ஃபேக் அக்கௌன்ட்டிற்கு எதுக்கு டா இவ்ளோ எமோஷன்’ என்று கடுமையாகத் திட்டியுள்ளார்.