உதயநிதி பிறந்தநாளுக்கு கொண்டாட்டங்கள் இல்லை.. நிவாரண உதவிகள் தான்.. ரசிகர் மன்றம் அறிவிப்பு

 

உதயநிதி பிறந்தநாளுக்கு கொண்டாட்டங்கள் இல்லை.. நிவாரண உதவிகள் தான்.. ரசிகர் மன்றம் அறிவிப்பு

இந்த வருடம் தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதிலாக, கஜா புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு தன் ரசிகர்களுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: இந்த வருடம் தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதிலாக, கஜா புயல் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு தன் ரசிகர்களுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வருடா வருடன் நவம்பர் 27 அன்று, நடிகர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கான பணிகளை ரசிகர் மன்ற தலைவரும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன் நின்று நடத்தி வருகிறார்.

udhay

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் செயலாளர் PK.பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் அவர்களின் மறைவாலும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீளா துயரத்தில் இருப்பதால், இந்த வருடம் நமது திரையுலக நாயகனின் கொண்டாட்டமாக இல்லாமல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணிகளை செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.