இந்தியை கற்பதில் என்ன தவறு இருக்கிறது? நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி!
இந்தி திணிப்புக்கு எதிராக போராடுபவர்களின் குழந்தைகள் தமிழ் மட்டும்தான் பேசுகிறார்களா?
இந்தி திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி இந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரே நாடு, ஒரே மொழி என்ற தலைப்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், ‘இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதே இந்தியாவுக்கான அடையாளம். இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். அதனால் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’ என்று தெரிவித்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
#Hindiprotest I have a question, what is harm in learning an extra language, that too something which will help the youngsters to travel across India? Instead of protesting, why not suggest North India introduces Tamil as a 3rd language, it would be a great exchange of culture:)
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) September 18, 2019
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்திய முழுவதும் இளைஞர்கள் செல்ல ஏதுவாக கூடுதல் மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கிறது . இதற்காகப் போராடுவதற்குப் பதில் வட இந்திய மக்கள் தமிழை மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொள்ள வலியுறுத்தலாம். இது சிறந்த கலாச்சார பரிமாற்றமாக இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.
Those who r supporting #Hindiprotest, do your children speak only Tamil?!! Does learning a new language take away love of mother tongue?! It is amusing to see … operating in total contrast to tradition & culture on one side & talking of preserving Tamil & culture on another!
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) September 18, 2019
Our children need quality education, proper holistic syllabus, they need exposure & confidence, once they have it they will know what is good & right for them . But we as parents & society need to make sure they know our culture, traditions & Tamil literature.
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) September 19, 2019
மற்றொரு பதிவில், இந்தி திணிப்புக்கு எதிராக போராடுபவர்களின் குழந்தைகள் தமிழ் மட்டும்தான் பேசுகிறார்களா? புதிய மொழியால் தாய் மொழியின் மீதான பற்று விலகிவிடுமா? தமிழ் மொழியை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறாக இயங்குகிறோம்’ என்றும்’ நமது பிள்ளைகளுக்குத் தேசாய் சிறந்த கல்வி, முழுமையான பாடத்திட்டம்,
நம்பிக்கை போன்றவை தான். இவை தெரிந்துவிட்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிந்துவிடும். பெற்றோர்களாகிய நாம், அவர்களுக்குக் கலாச்சாரம் மாற்று பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.