இது யாருடைய கை?: ரசிகர்களுடன் விளையாடும் ஏ.ஆர்.ரகுமான்!

 

இது யாருடைய கை?: ரசிகர்களுடன் விளையாடும் ஏ.ஆர்.ரகுமான்!

‘சர்கார்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: ‘சர்கார்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கில் கடும் சர்ச்சைக்கு பின் தீபாவளிக்கு வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் ரிலீசான ‘சர்கார்’ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததுடன் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது 6 நாட்களில் டபுள் சென்சுரியாக ரூ.200 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது.

சர்கார் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் ஏ.ஆர்முருகதாஸ், தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், வரலக்ஷ்மி, பாடலாசிரியர் விவேக், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஈ.சி.ஆரில் நடந்த சர்கார் சக்சஸ் பார்ட்டி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Whose hand is this ?

A post shared by @ arrahman on

இதனிடையே, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கேக் வெட்டும் புகைப்படத்தில் மெழுகுவர்த்தி ஏற்றும் கை யாருடையது என்று ஒரு கேள்வியை கேட்டு ரசிகர்களிடம் விளையாடியுள்ளார். அது தளபதி விஜய்யின் கை தான் என விஜய் ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமானின் பதிவில் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அளவாக பேசி சிரிக்கும் ஏ.ஆர்.ரகுமான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் சகஜமாக பேசி வருகிறார். ஏ.ஆர்.ரகுமானின் ‘2.0’ வெர்ஷனை பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.