இது தான் ‘பேட்ட’ கதையா?

 

இது தான் ‘பேட்ட’ கதையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தின் கதை பற்றிய புரளி வைரலாகி வருகிறது. வழக்கமாக பெரிய நடிகரின் புதுப்படம் ரிலீஸின் போது, அப்படத்தின் கதை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுவது சகஜம். அதே போன்று ‘பேட்ட’ படத்தின் கதை இதுவோ அதுவோ என ஏராளமான யூகங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

‘பேட்ட’ திரைப்படத்தின் கதை ஆணவக் கொலையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்படம் இந்து-முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலையை பற்றிய கதை என கூறப்படுகிறது. இப்படத்தின் கதை என பரவும் தகவலில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.

petta

எனினும், ‘சர்கார்’ படத்தின் கதையும் இதேபோல் ரிலீஸுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் லீக்கானது. படம் வெளியானதும் அதே கதை தான் என தெரியவந்தது. ஆக, ‘பேட்ட’ படத்தின் கதை புரளியும் கிட்டதட்ட உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியான ’பேட்ட’ படத்தின் மரண மாஸான பாடல்கள் ரசிகர்களிடையே மாஸ் ஹிட்டானது. மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.