‘ஆதித்யா வர்மா’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல்!
திருப்தி தராததால் வர்மா திரைப்படம் வேறு ஒரு இயக்குநரை வைத்து இயக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தைத் தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 எண்டெர்டெய்ன்மென்ட்டுக்கு அது திருப்தி தராததால் வர்மா திரைப்படம் வேறு ஒரு இயக்குநரை வைத்து இயக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து மீண்டும் துருவ் விக்ரமை வைத்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் கிரிசய்யா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பனித்தா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரதான் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்குத் தணிக்கை குழு ‘A’ சான்றிதழ் அளித்ததையடுத்து ஆதித்ய வர்மா திரைப்படம் தீபாவளி முடிந்து வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
He’s coming on 21st November.#AdithyaVarmaFromNov21
Fall in love yet again in theaters all over the world on Nov 21st.@DhruvVikram8 @Actor_Vikram @PriyaAnand @e4echennai @BanitaSandhu @cvsarathi @dop007 @GIREESAAYA @proyuvraaj @radhanmusic @10gMedia @skycinemas pic.twitter.com/d5azhB56Qf
— E4 Entertainment (@E4Emovies) November 6, 2019
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படம் நவம்பர் 21-ந் தேதி ரிலீசாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.