‘அவர்கிட்ட பவர் இருக்கு’ தீவிர மனநோயில் சிக்கிய பெண்: குணப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

 

‘அவர்கிட்ட பவர் இருக்கு’  தீவிர மனநோயில் சிக்கிய பெண்: குணப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் எத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் அவருக்கான ரசிகர் கூட்டம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகளிலும் அவருக்கு ஏராளமான  ரசிகர் கூட்டம் உள்ளன. இன்னும் சிலர் அவரை கடவுளாக வணங்கியும் வருகின்றனர். அந்த அளவிற்கு இன்னும் கூட கிரேஸ் குறையாமல் இருந்து வருகிறார்.

rajini

அந்த வகையில்  தீவிர மனநோயால் உயிருக்கு போராடிய இளம்பெண் ஒருவர் ரஜினிகாந்தால் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாகக் கூறி வியப்பை தந்துள்ளார்.

rajini

அனிஷா என்ற சென்னையை சேர்ந்த அந்த பெண்ணுக்கு  பைபோலார் பிரச்சனை இருந்துள்ளது. அதாவது தீராத மன அழுத்தங்களுடன் மனநோயாளியாக இருந்துள்ளார்.  அவருக்கு பலலட்சம்செலவழித்து அவரது பெற்றோர் சிகிச்சை பார்த்தும் எந்த பலனும் இல்லையாம். அதன் பிறகு ரஜினிகாந்தின் சந்திப்பு தான் அவரை அந்த நோயிலிருந்து மீட்டுள்ளது. 

rajini

இதுகுறித்து அந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் அவரை சந்தித்ததிலிருந்து நன்றாக உணர்கிறேன். அவருக்கு சக்திகள் இருக்கின்றது. நான் என் உணர்வை யாரிடமும் வெளிப்படுத்தமுடியாது என்று மருத்துவர்கள் கூறினார். ஆனால் என்னால் அது முடியும். நான் அவரை நேசிக்கிறேன். எப்போதும் நான்  அவரது ரசிகை தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.