அசுரனுக்கு பிறகு சென்னை வருவது ஸ்பெஷலாக இருக்கு…! நடிகை மஞ்சு வாரியர் உற்சாகம்!
இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளதாம்.
இந்நிலையில் சென்னையில் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சு வாரியர் சென்னைக்கு வருவது ஸ்பெஷலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அசுரன் படத்திற்கு பிறகு வேறு சில படங்களின் பணிகளுக்காக நான் சென்னை வந்துள்ளேன். ஆனால் அசுரன் படத்திற்கு சென்னைக்கு வருவது மிகவும் ஸ்பெஷலாக உள்ளது. மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசுகிறார்கள். தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.