’’10 நாளாக என் நண்பன் போராடினான்’’- வடிவேல் பாலாஜி மரணம் குறித்து ரோபோ சங்கர் உருக்கம்!
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி( வயது42) சென்னையில் இன்று காலமானார். உடல்நலக்குறைவினால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
வடிவேல்பாலாஜியின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்நிலையில், அவருடன் மேடைகளில் ஒன்றாக பயணித்து வரும் சக கலைஞர் நடிகர் ரோபோ சங்கர், பாலாஜியின் மரணம் குறித்து உருக்கமான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ’’என்னுடன் கடந்த 10 வருசமா மேடையில் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் அவ்வளவு ஒரு முக்கியமான கலைஞன். அன்பு நண்பன் வடிவேல் பாலாஜி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டான். வயசு 42தான். இத என்னால வீடியோ பதிவு கூட பண்ண முடியல. அந்த ஷாக்கிங் நியூசை கேட்ட பின்னர் என்னால பேசவும் முடியல.
எத்தனை பேர் மேடையில இருந்தாலும் தனியா தெரிவான். யார் என்ன கேட்டாலும் உடனுக்குடன் கவுண்ட் கொடுப்பான். மரணம் இப்படியெல்லாம் கூட வருமா என்று நண்பன் சாவு எனக்கு சொல்லுது.
Actor #RoboShankar’s Condolence Message To #Vadivelbalaji Death#RIPvadivelbalaji pic.twitter.com/7krbzsJW1o
— SPP Media Communication (@spp_media) September 10, 2020
10 நாளைக்கு முன்னாடி ஆஸ்பிட்டல் நண்பன் இருந்தபோது, என் மனைவி போய் பார்த்து விசாரிச்சுட்டு வந்தாங்க. அதுக்குள்ள இப்படி ஒரு ஷாக்கிங்.
அழகான குழந்தைகள் இருக்காங்க. நல்ல கலைஞனுக்கு கூட இப்படி ஒரு கொடூரமான சாவை கொடுக்குறதா? இந்த மாதிரி நேரத்துலதான் கடவுள் மேல ஒரு வெறுப்பும் வருது’’என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
- கதிரவன்