விரைவில் அரசியலுக்கு வருவேன் - நடிகை நமீதா

 
namitha tirupati

அரசியலில் அதிக ஆர்வம் உள்ளதால் விரைவில் அரசியலுக்கு வருவேன், அதுவரை காத்திருங்கள் என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

Actress Namitha Couple offers prayer at Tirumala Temple


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நமீதா தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் உரிய மரியாதை செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த நமீதாவுடன் அவரது ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். 

இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நடிகை நமீதா, “திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குழந்தைகள் தற்பொழுது நலமாக உள்ளனர். எனவே கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன்.  படத்தில் நடிப்பதை காட்டிலும் அரசியலில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே அரசியலுக்கு வருவேன். அதுவரை காத்திருங்கள்” எனக் கூறினார்.