6 நாட்களில் டபுள் சென்சுரி அடித்த விஜய்யின் ‘சர்கார்’!
தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது.
சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கில் கடும் சர்ச்சைக்கு பின் தீபாவளிக்கு வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் ரிலீசான ‘சர்கார்’ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்ததுடன் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத் தொடர்ந்து இப்படத்தில் வில்லியாக நடித்த வரலக்ஷ்மியின் கோமளவள்ளி என்ற கதாபாத்திர பெயர் மற்றும் அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய பிக், சர்கார் மறு தணிக்கை செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு வெளியாகின.
#Sarkar200CRWWgross after just 6 days ?? all-centre adhagalam ! Back to back #doublecentury+ grossers for #ThalapathyVijay now. He has set his bar way beyond the reach of his contemporaries, with #Sarkar and #Mersal pic.twitter.com/PuY50BHmdt
— Kaushik LM (@LMKMovieManiac) November 12, 2018
இந்நிலையில், ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடித்த மெர்சல் படத்தின் வசூல் சாதனையை சர்கார் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்ற பெருமையை சர்கார் திரைப்படம் பெற்றுள்ளது.
Sarkar team get together ?☑️ pic.twitter.com/XMXYnwcBnP
— A.R.Rahman (@arrahman) November 11, 2018
இதனிடையே, இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சர்கார் படக்குழுவினர் கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அந்த கேக்கில் அரசு வழங்கிய இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.