500 பேருக்கு வேலை கொடுத்த ஒரே புரோகிராம் பிக் பாஸ் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

 

500 பேருக்கு வேலை கொடுத்த ஒரே புரோகிராம் பிக் பாஸ் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் 500 பேருக்கு வேலை  கிடைத்துள்ளது என நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் 500 பேருக்கு வேலை  கிடைத்துள்ளது என நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடக்கவுள்ளது. மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது சாண்டி, முகென், லோஸ்லியா, ஷெரின் ஆகியோரே இறுதிப் போட்டிவரை வந்துள்ளனர். இவர்களில் யார் டைட்டிலை வெல்லப்போகிறார் என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.. 

Kamal

பிக்பாஸ் கலாச்சார சீரழிவு, பிக்பாஸை தடை செய்ய வேண்டும் என்கிற பல விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் 500 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கதவுகளை திறப்பது முதல் காட்சிகளை ஒளிபரப்புவது முதல் அனைத்திற்கு பின்னும் மனிதர்களின் உழைப்பு மறைந்துள்ளது. இப்படி தொழில்நுட்ப கலைஞர்கள், கார் டிரைவர்கள், உணவு கொடுப்பவர்கள் என்று மொத்தமாக 500 பேர் பிக்பாஸிற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி  பல கோடி பேரை மகிழ்வித்து வருகிறது என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.