நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம்; ஷூட்டிங் நிறைவு
Mar 18, 2021, 16:25 IST1616064919000
அதிமுகவிற்கு ஆதரவாக ஒவ்வொரு தேர்தலிலும் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நடிகர் செந்தில், அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் இணைந்துவிட்டார். அவர் ஹீரோவாக நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்திருக்கிறது.
ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் சுரேஷ் சங்கையா. அடுத்து இவர்நடிகர் பிரேம்ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தினை இயக்கிவந்தார். இதையடுத்து நடிகர் செந்திலை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். சத்திய சோதனை படத்தின் தயாரிப்பாளரே இந்த படத்தினையும் தயாரித்திருக்கிறார்.
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் செந்தில், ஹீரோவாக நடித்திருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.