ஆபாச டைரக்டரை கைது செய்யக்கோரி சென்னை கமிஷனருக்கு புகார் மனு!
Oct 9, 2020, 19:25 IST1602251737000
இரட்டை அர்த்தமுள்ள அதிக ஆபாசமுள்ள இரண்டாம் குத்து திரைப்படத்தை தயாரித்த இயக்குநர், நடிகர், நடிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இளைய தலைமுறையினரையும் கலாச்சாரத்தையும் காத்திட வேண்டும் என்று செனை காவல்துறை ஆணையருக்கு புகார் மனு அளித்திருக்கிறார் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிநாடார்.
ஆன்லைன் மூலமாக அந்த மனு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் குத்து படத்தின் இயக்குநரே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவரையும் அவருடன் நடித்த நடிகையையும் கைது செய்யச்சொல்லி புகார் அனுப்பப்பட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.