கிறிஸ்துமஸ் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

 

கிறிஸ்துமஸ் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படுவது கிறிஸ்துமஸ். இன்றைய நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயம் சென்று, கேக் வெட்டி, இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியாக இருப்பர். அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக தேவாலயங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆராதனை மற்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

சென்னை சாந்தோம் ஆலயத்தில் மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆராதனை நடத்தினார். இதேபோல் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி , நாகை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அத்துடன் குமரி, தூத்துக்குடி ,மதுரை, திருச்சி, தஞ்சை ,கோவை என பல ஊர்களில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்த நிலையில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.