காரைவிட்டு கீழிறங்கி சென்று நடுரோட்டில் குழந்தைக்கு பெயர் வைத்த முதல்வர்!

 

காரைவிட்டு கீழிறங்கி சென்று நடுரோட்டில் குழந்தைக்கு பெயர் வைத்த முதல்வர்!

தஞ்சை, திருவாரூர், கடலுார், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 20ற்கும் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் நேற்று கரூரில் ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் சுகாதாரகுழுவுடன் ஆலோசனை மேற்கொண்டதுடன் நலத்திட்டங்களையும் வழங்கினார்.

ஆண் குழந்தைக்கு அ.தி.மு.க. நிறுவனர் பெயரை வைத்த முதல்வர் பழனிசாமி..! |  Chief Minister Palanisamy child while mini clinic opening | nakkheeran

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் சென்றுகொண்டிருக்கும்போது, பேரளி என்ற கிராமத்தில் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, ஆண்குழந்தை ஒன்றுக்கு ராஜேஷ் என பெயர் சூட்டினார். சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது காரை விட்டு கீழிறங்கி குழந்தையை கையில் வாங்கி பெயர்சூட்டி, ஆசிர்வதித்தார்.