2019-20க்கான பகுதி பங்கு ஈவுத்தொகை 1 கோடி -மஞ்சுநாதனிடம் வழங்கிய முதல்வர்!

 

2019-20க்கான பகுதி பங்கு ஈவுத்தொகை 1 கோடி -மஞ்சுநாதனிடம் வழங்கிய முதல்வர்!

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019-20 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பகுதி பங்கு ஈவுத்தொகையான 1 கோடி ரூபாய்க்கான காசோலையை காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.நா. மஞ்சுநாதனிடம் வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மஞ்சுநாதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.