முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம்!
Oct 13, 2020, 09:34 IST1602561862000
முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது.
முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 1 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து காலை 9மணியளவில் வீட்டிலிருந்து தவுசாயம்மாள் உடல் ஊர்வலமாக எடுத்தது செல்லப்பட்டு சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, ஜி.கே .வாசன். பாஜக எல். முருகன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.