“ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்கள்” : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

 

“ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்கள்” :  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.“ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்கள்” :  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் மே மாதம் 20-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். அப்போது ஈரான் கடல் எல்லை தாண்டியதாக ஈரான் நாட்டு கடலோர காவல்படையினர் கைது செய்து ஈரான் நாட்டில் புஷர் என்ற இடத்தில் சிறை வைத்துள்ளார்கள். இதில் 681 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

“ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்கள்” :  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஈரானில் இருந்து தமிழக மீனவர்கள் 681 பேரை மீட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர், ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். கப்பலில் இடமில்லாததால் ஈரானில் 40 மீனவர்கள் விடப்பட்டு வந்தது கவனிக்கத்தக்கது.