மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

 

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!


மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள், இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!


கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பல்வேறு விஷயங்கள் குறிந்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!


கலெக்டர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், மருத்துவர்கள் குழுவின் ஆலோசனையின் போது அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் செப்டம்பர் மாதம் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்து இந்த கூட்டத்துக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.