கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு!
Jul 22, 2020, 12:09 IST1595399974000
இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 11,92 ,915 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,53,050 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,732 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 648 பேர் பலியாகியுள்ளனர். அந்த வகையில் கேரளாவில் இதுவரை 13,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுநாள் காணொலி மூலம் பங்கேற்க பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.