“துப்பாக்கியோடு மாடிக்கு ஓடிய டீனேஜ் பெண்” -அடுத்து அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.

 

“துப்பாக்கியோடு மாடிக்கு ஓடிய டீனேஜ் பெண்” -அடுத்து அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.

ஒரு 12ம் வகுப்பில் படிக்கும் பெண்ணை அவரின் தாயார் படிக்கச் சொன்னதால் கோபமுற்ற அந்த பெண் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டார் .

“துப்பாக்கியோடு மாடிக்கு ஓடிய டீனேஜ் பெண்” -அடுத்து அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் பாஜ்பூர் மான் கிராமத்தில் ஒரு 17 வயதான டீனேஜ் பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பில் படிக்கிறார் .அதனால் அவரின் தாயார் அந்த மகளை எந்நேரமும் படிக்க சொல்லியும், அதிக மார்க் எடுக்க சொல்லியும் கட்டாயப்படுத்தினார் .ஆனால் அந்த பெண்ணுக்கு இந்த தாயாரின் அட்வைஸ் பிடிக்கவில்லை .

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அந்த பெண் வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கே வந்த அந்த பெண்ணின் தாயார் அந்த மகளிடம், “பரீட்சைக்கு படிக்காமல் இப்படி மாடியில் வந்து நின்று கொண்டு வேடிக்கை பார்க்கிறாயே ,எப்படி அதிக மார்க் எடுப்பாய்” என்று கேட்டு கடுமையாக திட்டினார் .இதனால் அந்த பெண் கடுமையாக கோபமுற்றார் .அதனால் உடனே வீட்டிற்குள் சென்று அங்கிருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டு நேராக மாடிக்கு சென்றார் .அங்கு அனைவரும் பார்க்கும் போதே அந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்தார் .

அந்த காட்சியை  பார்த்த அவரின் தாயார் ,வெளியே சென்றிருந்த அவரின் கணவருக்கு போன் செய்து இந்த விஷயத்தினை  கூறினார் .உடனே அக்கம் பக்கத்தினர் அணைவரும் சேர்ந்து அந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து கிடந்த அந்த பெண்ணை அருகிலுள்ள ஹாப்பிட்டலுக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்  வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள் . பிறகு  இந்த செய்தியை அந்த பெண்ணின் தந்தையும் தாயும் அழுதது காண்போரை கண் கலங்க செய்தது .பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட லைசென்ஸ் இல்லாத அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தார்கள் . 

             

“துப்பாக்கியோடு மாடிக்கு ஓடிய டீனேஜ் பெண்” -அடுத்து அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.