பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கோழிக்கடை உரிமையாளர்!

 

பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கோழிக்கடை உரிமையாளர்!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்திவந்த வியாபாரி ஒருவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் டாஸ்மாக் கடை வாசலில் வைத்து, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கோழிக்கடை உரிமையாளர்!
source: Vikatan

அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்த உதயகுமார் என்ற நபர் அம்மாபேட்டை சந்தைப் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார. இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நின்றுகொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் படுகாயமடைந்த உதயகுமார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளர்.

பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கோழிக்கடை உரிமையாளர்!
source: Vikatan

இந்த கொலை குறித்து தெரிவித்த போலீசார் “உதயகுமாரும் மற்றொரு நபரும் அந்த பகுதியில் தனித்தனியாக கோழிக்கடை நடத்தி வந்தனர். இருவருக்குமிடையே தொழில் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு உதயகுமார் டாஸ்மாக் கடையின் முன் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதற்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கு ஒன்றில் உதயகுமாருக்கு தொடர்பு இருக்கிறது” என்றும் தெரிவித்தனர்.
மேலும் டாஸ்மாக் கடை மூடிய பிறகு அதிக விலைக்கு மது விற்றதாகவும் கூறப்படுகிறது. தொழில் போட்டி காரணமா? அல்லது பழிவாங்கும் எண்ணத்தில் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.