திருச்சி காவிரி ஆற்றில் கையை அறுத்து, சென்னை இளைஞர் தற்கொலை!

 

திருச்சி காவிரி ஆற்றில் கையை அறுத்து, சென்னை இளைஞர் தற்கொலை!

திருச்சி

இரு சிறுநீரகமும் செயல் இழந்ததால் விரக்தியில் சென்னையை சேர்ந்த இளைஞர், திருச்சி காவிரி ஆற்றில் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த பனையகுறிச்சி காவரி ஆற்றில் நேற்று கை அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள், திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி காவிரி ஆற்றில் கையை அறுத்து, சென்னை இளைஞர் தற்கொலை!

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜீவானந்தம் என்பது தெரியவந்தது. இரு சீறுநீரகங்களும் செயல் இழந்ததால் விரக்தியில் இருந்து வந்த ஜீவானந்தம், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருவெறும்பூரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை ஆற்றுக்கு குளிக்க செல்வதாக கூறி சென்றவர், அங்கு கையை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.