சென்னை- மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டி- 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

 

சென்னை- மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டி- 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

சென்னை

சென்னை போரூர் அருகே, மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டி தொடங்கியுள்ளது.

சென்னை- மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டி- 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

சென்னை போரூர் அருகே, கியூ.பி.ஜி ஸ்னூக்கர் அக்காடமி சார்பில் மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழகம்,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 175 ஸ்னூக்கர் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

சென்னை- மாநில அளவிலான ஸ்னூக்கர் போட்டி- 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

கியூ.பி.ஜி ஸ்னூக்கர் அகாடமியின் மவுண்ட் ரோடு, புரசைவாக்கம் மற்றும் போரூர் கிளைகளில் தினசரி 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதலின் முழுமையான பின்பற்றப்படுகின்றன என்று போட்டி அமைப்பாளர்கள் கூறினர். போட்டி நேரம் அறிவிக்கப்பட்டதும், ஒவ்வொரு வீரர்களுக்கு கை கழுவும் கிருமி நாசினி கொடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

வருகின்ற 10ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதி போட்டி 10 ஆம் தேதி நிறைவடையும் என்றும், அன்றைய தினமே வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.