தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை

 

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை

மதுரவாயல் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மீனா(39). நேற்று இரவு ஞானசேகரன் பணிக்கு சென்ற நிலையில், மீனா வீட்டைப் பூட்டிவிட்டு போரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை மீனா வீட்டிற்கு திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை

இதனை அடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.