`மனைவியுடன் தகராறு; விஷம் குடித்து உயிரை மாய்த்த சென்னை காவலர்!’- தவிக்கும் குழந்தைகள்

 

`மனைவியுடன் தகராறு; விஷம் குடித்து உயிரை மாய்த்த சென்னை காவலர்!’- தவிக்கும் குழந்தைகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`மனைவியுடன் தகராறு; விஷம் குடித்து உயிரை மாய்த்த சென்னை காவலர்!’- தவிக்கும் குழந்தைகள்

சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் பணியாற்றி வந்தவர் காவலர் ஜோசப். 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 22ம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார் ஜோசப்.

இதனிடையே, நேற்று காலை 8.45 மணியளவில் வீட்டில் இருந்த ஜோசப், விஷம் குடித்துவிட்டார். மயங்கி கிடந்த அவரை, சகோதரர் ஜான்சன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

`மனைவியுடன் தகராறு; விஷம் குடித்து உயிரை மாய்த்த சென்னை காவலர்!’- தவிக்கும் குழந்தைகள்

இறந்துபோன ஜோசப்புக்கு திருமணமாகி ஜெகதீஸ்வரி (34) என்ற மனைவியும், சந்திப் குமார் (11) என்ற மகனும், யோகிதா (10) என்ற மகளும் இருக்கின்றனர். குழந்தைகள் இருவரும் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர் .

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அவரது மனைவி அவரது பெற்றோரின் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து காவல்துறையின் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.