சமூக இடைவெளியை மீறி சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்!

 

சமூக இடைவெளியை மீறி சென்னை காசிமேட்டில்  மீன் வாங்க குவிந்த கூட்டம்!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நான்காவது ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்பட்டது.

சமூக இடைவெளியை மீறி சென்னை காசிமேட்டில்  மீன் வாங்க குவிந்த கூட்டம்!

இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் 5 வது முறையாக ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமூக இடைவெளியை மீறி சென்னை காசிமேட்டில்  மீன் வாங்க குவிந்த கூட்டம்!

இந்நிலையில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி, ஊரடங்கு என்பதை புறந்தள்ளி மக்கள் மீன் வாங்க வந்திருந்தது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.